حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ ـ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ . تَابَعَهُ سُلَيْمَانُ عَنِ ابْنِ دِينَارٍ. وَقَالَ وَرْقَاءُ عَنِ ابْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ وَزَيْدُ بْنُ أَسْلَمَ وَسُهَيْلٌ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழத்திற்குச் சமமானதை தர்மம் செய்கிறாரோ – அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை – நிச்சயமாக அல்லாஹ் அதனைத் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தனது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று, அது ஒரு மலையளவு ஆகும் வரை அவருக்காக அதனை வளர்க்கிறான்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனது நேர்மையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழத்தை சதகாவாகக் கொடுத்தால், அல்லாஹ் அதனைத் தன் வலது கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு, உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியையோ அல்லது இளம் பெண் ஒட்டகத்தையோ வளர்ப்பதைப் போன்று, அது ஒரு மலையைப் போல அல்லது அதைவிடவும் பெரிதாகும் வரையில் அதனை அல்லாஹ் வளர்க்கிறான்.