حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ ـ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
அல்-அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரின் பணிகளில் (அதாவது, அவர்களுக்குப் பணிவிடை செய்வதில்) ஈடுபட்டிருப்பார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால், தொழுகைக்காக (பள்ளிவாசலுக்கு) புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.