அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (முன்னர் வாழ்ந்த) ஒரு நபி (அலை) அவர்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்ததை நான் இப்பொழுதும் பார்ப்பதைப் போன்று இருக்கிறது. (அதாவது,) அந்த நபியை அவருடைய சமூகத்தார் அடித்து இரத்தக் காயப்படுத்தியிருந்தார்கள். அப்போது அவர் (அந்த நபி) தன் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, **"ரப்பி இக்ஃபிர் லிகவ்மீ, ஃபஇன்னஹும் லா யஅலமூன்"** (இறைவா! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.