அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடன் நான் உறவைப் பேணுகிறேன், ஆனால் அவர்களோ என்னைத் துண்டித்துவிடுகிறார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்கிறேன், ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கிறார்கள். நான் அவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் மடமையுடன் நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீர் சொல்வது உண்மையானால், நீர் அவர்களுக்குச் சுடு சாம்பலை ஊட்டுவது போலாகும். மேலும், நீர் இந்த நிலையில் நீடிக்கும் வரை, அல்லாஹ்விடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கு எதிராக உமக்குத் துணையாக இருந்துகொண்டே இருப்பார்."