அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக நீதி செலுத்துபவர்கள் அல்லாஹ்விடத்தில், அளவற்ற அருளாளனின் (அர்-ரஹ்மான்) வலது புறத்தில் ஒளியாலான மிம்பர்களில் (மேடைகளில்) இருப்பார்கள். அவனது இரு கைகளும் வலது கைகளே! (இது அல்லாஹ்வுக்குரிய ஒரு பண்பாகும், அவனது முழுமையான கண்ணியத்தையும், ஆற்றலையும் குறிக்கிறது, திசையையோ அல்லது உடல் உறுப்பையோ அல்ல.) (இவர்கள் யார் எனில்) தங்களது தீர்ப்புகளிலும், தங்களது குடும்பத்தாரிடமும், மேலும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டவற்றிலும் நீதி செலுத்துபவர்கள் ஆவார்கள்."