அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் என்னை ஒரு பொதுப் பணிக்கு நியமிக்க மாட்டீர்களா? அவர்கள் தங்கள் கையால் எனது தோளைத் தட்டிவிட்டு கூறினார்கள்: அபூ தர்ரே, நீர் பலவீனமானவர், மேலும் அதிகாரம் ஓர் அமானிதம் ஆகும். மேலும் மறுமை நாளில் அது இழிவுக்கும் கைசேதத்திற்கும் காரணமாக அமையும்; அதன் கடமைகளை நிறைவேற்றி, அதனுடன் தொடர்புடைய பணிகளை (முறையாக) செய்பவரைத் தவிர.