ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர், கண்ணியமிக்க, செம்மையான, (செயல்களைப்) பதிவுசெய்கின்ற வானவர்களுடன் (உயர்ந்த அந்தஸ்தில்) இருப்பார். மேலும், எவர் குர்ஆனை ஓதுகையில் திக்கித் திணறி, அது அவருக்குக் கடினமாகவும் இருக்கிறதோ, அவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.