حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள், ஏனெனில் என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, அது நிச்சயமாக கட்டப்பட்ட ஒட்டகத்தை விடவும் கடுமையாக தப்பிச் செல்லக்கூடியது.”
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
"குர்ஆனைத் தொடர்ந்து ஓதி அதனைப் பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, அது கால்கள் கட்டப்பட்ட ஒட்டகங்களை விடவும் மிகக் கடுமையாகத் தப்பித்துச் செல்லக் கூடியதாகும்."