அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறானோ அதைப்பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? சிரமமான சூழ்நிலைகளிலும் (குளிரின் கடுமை, உடல்நலக்குறைவு, சோம்பல் போன்ற) முழுமையாக உளூ செய்வது, பள்ளிவாசல்களை நோக்கி அதிகமாக எட்டு வைத்துச் செல்வது, மேலும் ஒரு தொழுகைக்குப் பிறகு அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பது. அதுவே உங்களுக்கு 'ரிபாத்' ஆகும் (இறைவழியில் நிலைத்து நிற்பது, எதிரிகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது போன்றது); அதுவே உங்களுக்கு 'ரிபாத்' ஆகும்; அதுவே உங்களுக்கு 'ரிபாத்' ஆகும்."