அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து (நேரத்) தொழுகைகளும், ஒரு ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரையும் (அவற்றுக்கிடையே நிகழும்) பெரும் பாவங்கள் (செய்யப்படாமல்) தவிர்க்கப்பட்டால், அவற்றுக்கு இடையில் (நிகழும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து (நேரத்) தொழுகைகளும், ஒரு ஜும்ஆ தொழுகையிலிருந்து (அடுத்த) ஜும்ஆ தொழுகை வரையும், அவற்றுக்கு இடையில் (நடக்கும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.