الحادي والعشرون: عن أبي المنذر أبي بن كعب رضي الله عنه قال: كان رجل لا أعلم رجلاً أبعد من المسجد منه، وكان لا تخطئه صلاة فقيل له، أو فقلت له: لو اشتريت حماراً تركبه في الظلماء، وفي الرمضاء، فقال: ما يسرني أن منزلي إلى جنب المسجد، إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي، فقال رسول الله صلى الله عليه وسلم: قد جمع الله لك ذلك كله ((رواه مسلم)).
உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் இருந்தார். பள்ளிவாசலிலிருந்து அவரை விடத் தொலைவில் வீடுடைய வேறு எந்த மனிதரையும் நான் அறியவில்லை. மேலும், அவர் (ஜமாஅத்துடன்) தொழப்படும் ஸலாத்தை ஒருபோதும் தவறவிட்டதில்லை. அவரிடம் கூறப்பட்டது (அல்லது நான் அவரிடம் கூறினேன்): "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால், இருண்ட இரவுகளிலும், கொதிக்கும் மணலிலும் அதன் மீது சவாரி செய்யலாமே." அவர் கூறினார்: "எனது வீடு பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில், பள்ளிவாசலை நோக்கிய எனது காலடிகளும், நான் எனது குடும்பத்தினரிடம் திரும்பும்போது அங்கிருந்து எடுத்துவைக்கும் காலடிகளும் (என் நன்மைக் கணக்கில்) பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் ஆவலுடன் விரும்புகிறேன்." இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு அந்த எல்லா நன்மைகளையும் சேர்த்து வழங்கியுள்ளான்" என்று கூறினார்கள்.
முஸ்லிம்.
மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: "நீங்கள் எதை எதிர்பார்த்தீர்களோ அதற்கான கூலி உங்களுக்கு உண்டு".