அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களிலேயே தொழுகைக்காக அதிக நற்கூலியைப் பெறுபவர்கள், (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவிலிருந்து நடந்து வருபவர்களே! பிறகு அதற்கடுத்த தொலைவிலிருந்து வருபவர்கள். இமாமுடன் தொழுவதற்காகக் காத்திருப்பவர், (முன்கூட்டியே) தொழுதுவிட்டு உறங்குபவரை விட அதிக நற்கூலியைப் பெறுவார்.'