ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'வானவர்கள் தங்களின் இறைவனிடம் வரிசையாக நிற்பதைப் போன்று நீங்கள் (தொழுகைக்காக) வரிசையாக நிற்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'வானவர்கள் தங்கள் இறைவனிடம் எவ்வாறு வரிசையாக நிற்பார்கள்?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'அவர்கள் முதல் வரிசையை (முழுமையாக) பூர்த்தி செய்வார்கள்; பின்னர் வரிசையில் (தோளோடு தோள் சேர்த்து) நெருக்கமாக நின்று கொள்வார்கள்' என்று கூறினார்கள்."