அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
எவர் ஒருவர் உளூவை முழுமையாகச் செய்து, பின்னர் ஜும்ஆவிற்கு வந்து, (குத்பாவை) செவிமடுத்து, மௌனமாக இருந்தாரோ, அவருக்கு இந்த ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும், மேலும் மூன்று நாட்கள் கூடுதலாகவும் (மன்னிக்கப்படும்). மேலும் எவர் ஒருவர் கூழாங்கற்களைத் தொட்டாரோ அவர் வீணான காரியத்தைச் செய்தார்.