அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்ட படைகளாகும் (அவை படைக்கப்பட்ட போதே குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன). அவற்றில் ஒன்றுக்கொன்று அறிமுகமானவை (ஒத்த குணாதிசயங்கள், இயல்புகள் கொண்டவை) ஒன்றிணைகின்றன; அவற்றில் ஒன்றுக்கொன்று அறிமுகமில்லாதவை (வேறுபட்ட குணாதிசயங்கள், இயல்புகள் கொண்டவை) முரண்படுகின்றன.”
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆன்மாக்கள் அணிவகுக்கப்பட்ட படைகளாகும்; அவற்றில் ஒன்றுக்கொன்று அறிமுகமானவை இணங்கிவிடுகின்றன, அறிமுகமில்லாதவை பிரிந்துவிடுகின்றன.