அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் நேசர் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை (கடைப்பிடிக்குமாறு) அறிவுறுத்தினார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை ஒருபோதும் கைவிடமாட்டேன்: (அவை) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுகையை நிறைவேற்றுவது, மேலும் வித்ரு தொழுகையை நிறைவேற்றும் வரை நான் தூங்கக்கூடாது என்பது."