அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அபூ ஸயீதே! எவர் அல்லாஹ்வை இரட்சகனாகவும் (இறைவனாகவும்), இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் (மனப்பூர்வமாக) ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விடுகிறது."
இதைக் கேட்டு அபூ ஸயீத் (ரழி) அவர்கள் வியப்படைந்தார்கள். (அவர்கள்) 'அல்லாஹ்வின் தூதரே, எனக்காக அதை மீண்டும் கூறுங்கள்!' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே (மீண்டும்) கூறிவிட்டுப் பிறகு சொன்னார்கள்: "(இன்னும்) வேறொன்று உள்ளது; அதன் மூலம் அடியார் சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுகிறார். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டதைப் போன்றதாகும்."
(அபூ ஸயீத்) 'அல்லாஹ்வின் தூதரே! அது என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது!' என்று பதிலளித்தார்கள்.