அப்துல்லாஹ் பின் `அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என்னிடமிருந்து ஒரேயொரு வசனமாக இருந்தாலும் அதை (மக்களுக்கு) எடுத்துரையுங்கள்; பனீ இஸ்ராயீலரைப் பற்றியும் அறிவியுங்கள்; அதில் குற்றமில்லை. மேலும், எவர் என் மீது வேண்டுமென்றே பொய் கூறுகிறாரோ, அவர் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்."