(இதன் பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாக யாருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றல் கொண்டவன்”)
என்று பத்து முறை சொல்கிறாரோ, அவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் நான்கு அடிமைகளை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்.
ரபீஃ இப்னு குஸைம் அவர்களும் இதே போன்ற ஒரு செய்தியை அறிவித்தார்கள். (அறிவிப்பாளர்) நான் ரபீஃ அவர்களிடம், “இதை நீங்கள் யாரிடம் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அம்ர் இப்னு மைமூன் அவர்களிடமிருந்து” என்றார்கள். நான் அம்ர் இப்னு மைமூன் அவர்களிடம் சென்று, “இதை நீங்கள் யாரிடம் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இப்னு அபீ லைலா அவர்களிடமிருந்து” என்றார்கள். நான் இப்னு அபீ லைலா அவர்களிடம் சென்று, “இதை நீங்கள் யாரிடம் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து” என்றார்கள். அபூ அய்யூப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (இதை) அறிவித்தார்கள்.