அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் அவனது பங்கு எழுதப்பட்டுவிட்டது; அதை அவன் அடைந்தே தீருவான். கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகளின் விபச்சாரம் செவிமடுத்தலாகும். நாவின் விபச்சாரம் பேசுவதாகும். கையின் விபச்சாரம் (தவறாகப்) பிடிப்பதாகும். காலின் விபச்சாரம் நடந்து செல்வதாகும். இதயம் ஏங்குகிறது; ஆசைப்படுகிறது. மர்ம உறுப்பு அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்பிக்கிறது.”