ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூ குஹாஃபா (ரழி) அவர்கள் மக்கா வெற்றியின் நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அன்னாரது தலையும் தாடியும் தும்பைப்பூவைப் போல் வெண்மையாக இருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதை வேறு எதைக் கொண்டாவது மாற்றுங்கள், ஆனால் கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.