அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது, அவர் தமது ஆணுறுப்பைத் தமது வலது கையால் பிடிக்க வேண்டாம்; மேலும் தமது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம்; மேலும் (பானம் அருந்தும்) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்."
அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (ஏதேனும்) அருந்தும்போது, பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம். உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது, தமது வலது கையால் தமது ஆண் குறியைத் தொட வேண்டாம். மேலும், உங்களில் ஒருவர் (இயற்கை உபாதைக்குப் பின்) சுத்தம் செய்யும்போது, தமது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம்.”