இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2946 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ،
- يَعْنِي ابْنَ الْمُخْتَارِ - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ رَهْطٍ، مِنْهُمْ أَبُو الدَّهْمَاءِ وَأَبُو
قَتَادَةَ قَالُوا كُنَّا نَمُرُّ عَلَى هِشَامِ بْنِ عَامِرٍ نَأْتِي عِمْرَانَ بْنَ حُصَيْنٍ فَقَالَ ذَاتَ يَوْمٍ إِنَّكُمْ
لَتُجَاوِزُونِي إِلَى رِجَالٍ مَا كَانُوا بِأَحْضَرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي وَلاَ أَعْلَمَ
بِحَدِيثِهِ مِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ
السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ ‏ ‏ ‏.‏
ஒரு குழுவினரில் அபுத் தஹ்மா மற்றும் அபூ கதாதா ஆகியோர் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் ஹிஷாம் இப்னு ஆமிர் (ரலி) அவர்களைக் கடந்து இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்களிடம் செல்வது வழக்கம். ஒரு நாள் ஹிஷாம் (ரலி) கூறினார்கள்: "நீங்கள் சில மனிதர்களிடம் செல்வதற்காக என்னைக் கடந்து செல்கிறீர்கள். அவர்கள் என்னை விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் வீற்றிருந்தவர்களும் அல்லர் (அதாவது, நபி (ஸல்) அவர்களின் சபைகளில் என்னை விட அதிகமாகக் கலந்துகொண்டவர்களும் அல்லர்); என்னை விட அதிகமாக அன்னாரின் ஹதீஸ்களை அறிந்தவர்களும் அல்லர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: 'ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் மறுமை நாள் ஏற்படும் வரை, தஜ்ஜாலை விடப் பெரியதொரு படைப்பு எதுவும் இல்லை.'"
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح