அல்-அஃகர்ர் அல்-முஸனீ (ரழி) அவர்கள் (நபியவர்களின்) தோழர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக என் இதயத்தின் மீது ஒருவித மறைப்பு (அல்லது மேகம்) ஏற்படுகிறது. மேலும், நான் ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்."