இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

182 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ أَدْنَى مَقْعَدِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَنْ يَقُولَ لَهُ تَمَنَّ ‏.‏ فَيَتَمَنَّى وَيَتَمَنَّى فَيَقُولُ لَهُ هَلْ تَمَنَّيْتَ فَيَقُولُ نَعَمْ ‏.‏ فَيَقُولُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَمِثْلَهُ مَعَهُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் சொர்க்கத்தில் மிகக் குறைந்த அந்தஸ்தில் இருப்பவர் யாரெனில், அவரிடம் (இறைவன்), 'ஆசைப்படு!' என்று கூறுவான். அவரும் ஆசைப்படுவார்; மீண்டும் மீண்டும் ஆசைப்படுவார். பிறகு அவரிடம், 'நீ (எல்லாவற்றையும்) ஆசைப்பட்டுவிட்டாயா?' என்று அவன் கேட்பான். அதற்கு அவர் 'ஆம்' என்று கூறுவார். அப்போது அவரிடம், 'நிச்சயமாக நீ ஆசைப்பட்டவை உனக்கு உண்டு; அத்துடன் அதைப் போன்றதும் உனக்கு உண்டு' என்று அவன் கூறுவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح