وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَدْنَى مَقْعَدِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَنْ يَقُولَ لَهُ تَمَنَّ . فَيَتَمَنَّى وَيَتَمَنَّى فَيَقُولُ لَهُ هَلْ تَمَنَّيْتَ فَيَقُولُ نَعَمْ . فَيَقُولُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَمِثْلَهُ مَعَهُ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் சொர்க்கத்தில் மிகக் குறைந்த அந்தஸ்தில் இருப்பவர் யாரெனில், அவரிடம் (இறைவன்), 'ஆசைப்படு!' என்று கூறுவான். அவரும் ஆசைப்படுவார்; மீண்டும் மீண்டும் ஆசைப்படுவார். பிறகு அவரிடம், 'நீ (எல்லாவற்றையும்) ஆசைப்பட்டுவிட்டாயா?' என்று அவன் கேட்பான். அதற்கு அவர் 'ஆம்' என்று கூறுவார். அப்போது அவரிடம், 'நிச்சயமாக நீ ஆசைப்பட்டவை உனக்கு உண்டு; அத்துடன் அதைப் போன்றதும் உனக்கு உண்டு' என்று அவன் கூறுவான்."