حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَبَائِرُ ". وَحَدَّثَنَا عَمْرٌو حَدَّثَنَا شُعْبَةُ عَنِ ابْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَكْبَرُ الْكَبَائِرِ الإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَوْلُ الزُّورِ ". أَوْ قَالَ " وَشَهَادَةُ الزُّورِ ".
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) 'பெரும் பாவங்கள்' (பற்றிப் பேசினார்கள்). (பின்னர், அவற்றிலேயே) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரியவை: அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், ஓர் உயிரைக் கொல்வதும், பெற்றோருக்கு மாறு செய்வதும், பொய் பேசுவதும் ஆகும்.' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வது' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் - அல்லது பெரும் பாவங்களைப் பற்றிக் கேட்கப்பட்டார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், ஓர் உயிரைக் கொல்வதும், பெற்றோருக்கு மாறுசெய்வதும் (ஆகியன)" என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். (பிறகு) "பொய்யான கூற்று" அல்லது "பொய் சாட்சியம்" என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்) ஷுஅபா கூறினார்: அது அனேகமாக "பொய் சாட்சியம்" என்பதாகவே இருந்தது.