حَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَالْحَسَنِ بْنِ عَمْرٍو، وَفِطْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، - قَالَ سُفْيَانُ وَلَمْ يَرْفَعْهُ سُلَيْمَانُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ فِطْرٌ وَالْحَسَنُ - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِلَ هُوَ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பிரதி உபகாரம் செய்பவர் உறவைப் பேணி வாழ்பவர் அல்லர்; மாறாக, உறவு துண்டிக்கப்படும்போது அதை இணைப்பவரே உறவைப் பேணி வாழ்பவர் ஆவார்.”
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உறவைப் பேணுபவர் என்பவர், (தனக்கு நன்மை செய்தவர்களுக்கு) பதிலுக்குப் பதில் செய்பவர் அல்ல. மாறாக, (தனது) உறவு துண்டிக்கப்பட்டபோது அதை இணைப்பவரே (உண்மையான) உறவைப் பேணுபவர் ஆவார்.”
وعنه النبي صلى الله عليه وسلم قال: ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قَطَعت رحمُه وصلها ((رواه البخاري)).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உறவைப் பேணுபவர் என்பவர், (தனக்குச் செய்யப்பட்ட நன்மைக்கு) பதிலுக்குச் செய்பவர் அல்லர். மாறாக, உறவைப் பேணுபவர் என்பவர், அவரது உறவினர்கள் (அவருடனான உறவைத்) துண்டித்தாலும், அவர் அதை இணைப்பவரே ஆவார்."