حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ .
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓ முஸ்லிம் பெண்களே! உங்களில் எவரும் தம் அண்டை வீட்டுப் பெண்மணி (அளிக்கும் அன்பளிப்பை), அது ஆட்டுக்காலின் குளம்பாக (சதையில்லாத கால் பகுதி) இருந்தாலும் கூட, அற்பமாகக் கருத வேண்டாம்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: முஸ்லிம் பெண்களே! எந்த அண்டை வீட்டாப் பெண்ணும் தன் அண்டை வீட்டாப் பெண்ணுக்கு (அவள் கொடுக்கும்) ஓர் ஆட்டின் குளம்பைக் கூட அற்பமாகக் கருத வேண்டாம்.
الثامن: عنه قال رسول الله صلى الله عليه وسلم: يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம் பெண்களே, ஓர் அண்டை வீட்டுக்காரி தனது அண்டை வீட்டுக்காரிக்கு (செய்யும் உபகாரத்தை) அற்பமாகக் கருத வேண்டாம், ஓர் ஆட்டின் குளம்பாக இருந்தாலும் கூட.'
(அல்-புகாரி மற்றும் முஸ்லிம்)
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஸ்லிம் பெண்களே! எந்த ஒரு அண்டை வீட்டுக்காரியும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு (அன்பளிப்பாகக்) கொடுக்கும் எதையும் அற்பமாகக் கருத வேண்டாம், அது ஓர் ஆட்டின் கால் குளம்பாக இருந்தாலும் சரியே."