وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، تَزَوَّجَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஒரு நவாத் எடையளவு தங்கத்தை (மஹராகக் கொடுத்து) திருமணம் செய்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: ஓர் ஆட்டைக் கொண்டாவது (திருமண) விருந்தளியுங்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் ஒரு பெண்ணை, ஒரு பேரீச்சம்பழத்தின் கொட்டை எடை அளவுள்ள தங்கத்தை (மஹராக) கொடுத்து மணந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: ஓர் ஆட்டைக் கொண்டாவது (திருமண) விருந்தளியுங்கள்.