அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் இழிசொல்லைப் பொறுத்துக்கொள்வதில் அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். ஆயினும் அவன் அவர்களுக்கு நல்வாழ்வளித்து, வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்."
அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் துன்பச் சொற்களைச் சகித்துக்கொள்வதில் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்கள்; அவனுக்குப் பிள்ளை உண்டெனக் கூறுகிறார்கள். ஆயினும் இதையெல்லாம் மீறி, அவன் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறான்; அவர்களுக்கு (வேண்டியவற்றைக்) கொடுக்கிறான்."