حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள்.
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ ـ هُوَ ابْنُ أَبِي عُتْبَةَ مَوْلَى أَنَسٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا، فَإِذَا رَأَى شَيْئًا يَكْرَهُهُ عَرَفْنَاهُ فِي وَجْهِهِ.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், தம் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக நாணமுடையவர்களாக இருந்தார்கள். தாம் வெறுக்கும் ஒன்றை அவர்கள் கண்டால், அதை நாங்கள் அவர்களின் முகத்தில் அறிந்துகொள்வோம்.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தன் கூடாரத்தில் இருக்கும் ஒரு கன்னிகைப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை விரும்பாதபோது, அதை நாங்கள் அவர்களின் முகத்தில் கண்டு அறிந்துகொள்வோம்."
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் கூறினார்கள், "நபி (ஸல்) அவர்கள், தமது கூடாரத்தில் இருக்கும் ஒரு கன்னிப்பெண்ணை விட அதிக நாணம் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றை விரும்பாதபோது, அது அவர்களுடைய முகத்தில் தெரியும்."
“நபி (ஸல்) அவர்கள், திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை விரும்பவில்லை என்றால், அதை அவர்களின் முகக் குறிப்பிலிருந்து நாங்கள் அறிந்து கொள்வோம்.”