حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(மார்க்க விடயங்களில்) மக்களுக்கு இலகுபடுத்துங்கள். மேலும், அவர்களுக்குக் கடினப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள், அவர்களை (இஸ்லாத்தை விட்டும்) விரண்டோடச் செய்யாதீர்கள்."
அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் எவரையேனும் தம் காரியங்களில் சிலவற்றுக்காக (அல்லது ஒரு பணிக்காக) அனுப்பும்போது, "(மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; (அவர்களை இஸ்லாத்தை விட்டும் அல்லது நற்செயலை விட்டும்) வெறுப்படையச் செய்யாதீர்கள். (விஷயங்களை) எளிதாக்குங்கள்; (அவர்களுக்கு) சிரமப்படுத்தாதீர்கள்" என்று கூறுவார்கள்.
அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் ஒருவரை ஏதேனும் ஒரு பணிக்காக அனுப்பினால், "மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்; அவர்களை வெறுப்படையச் செய்யாதீர்கள். காரியங்களை எளிதாக்குங்கள்; அவற்றை கடினமாக்காதீர்கள்" என்று கூறுவார்கள்.