حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَتْ قُرَيْشٌ تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ فَلَمَّا هَاجَرَ إِلَى الْمَدِينَةِ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ شَهْرُ رَمَضَانَ قَالَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அறியாமைக் காலத்தில் குறைஷிகள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்றதுடன் (மக்களுக்கும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டபோது அவர்கள் (ஸல்), "யார் (இந்த நோன்பை) நோற்க விரும்புகிறாரோ அவர் நோற்கலாம்; யார் அதனை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் விட்டுவிடலாம்" என்று கூறினார்கள்.