எனக்கு ஒரு சகோதரி இருந்தார். அவரைத் திருமணம் செய்து கொடுக்குமாறு என்னிடம் பெண் கேட்கப்பட்டது. அப்போது என் தந்தையின் சகோதரர் மகன் என்னிடம் வந்தார்; நான் அவளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு அவர், திரும்ப அழைத்துக்கொள்ளக்கூடிய ஒரு தலாக் கூறி அவளை விவாகரத்து செய்தார். அவளுடைய இத்தா காலம் முடியும் வரை அவர் அவளைக் கைவிட்டார். அவளைத் திருமணம் செய்து கொடுக்குமாறு என்னிடம் (மீண்டும்) கேட்கப்பட்டபோது, (அவளுடைய முன்னாள் கணவர்) அவளைத் திருமணம் செய்துதரக் கேட்டு என்னிடம் வந்தார். அப்போது நான் அவரிடம், “இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவளை ஒருபோதும் உமக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன்” என்று கூறினேன். பிறகு என்னுடைய விஷயத்தைப் பற்றி பின்வரும் வசனம் அருளப்பட்டது: