அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓரிரு பேரீச்சம்பழங்கள் அல்லது ஓரிரு கவளம் உணவு கொடுத்தால் திரும்பிச் செல்பவர் ஏழை (மிஸ்கீன்) அல்லர். மாறாக, யாசிப்பதைத் தவிர்ப்பவரே ஏழை ஆவார். நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்: 'அவர்கள் மக்களிடம் வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்.'"