அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் சந்தையில் ஒரு பொருளை விற்பனைக்கு வைத்திருந்தார். ஒரு முஸ்லிமை (ஏமாற்றி) அதில் சிக்கவைப்பதற்காக, அப்பொருளுக்குத் தனக்குத் தரப்படாத ஒரு விலையைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தரப்பட்டதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். அப்போது பின்வரும் இறைவசனம் அருளப்பெற்றது:
அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தனது வியாபாரப் பொருளை (விற்பனைக்கு) வைத்து, (உண்மையில்) அப்பொருளுக்குத் தரப்படாத ஒரு விலையைத் தரப்பட்டதாகக் கூறி, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டார். அப்போது (பின்வரும்) இறைவசனம் அருளப்பட்டது:
மேலும் இப்னு அபூஅவ்ஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நஜிஷ் செய்பவர் (பொருளை வாங்கும் நோக்கமில்லாமல் விலையை ஏற்றிக் கேட்பவர்) வட்டி உண்பவராகவும், மோசடிக்காரராகவும் இருக்கிறார்."