حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي،
مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ،
الْخُدْرِيِّ أَنَّ رِجَالاً، مِنَ الْمُنَافِقِينَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانُوا إِذَا خَرَجَ
النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْغَزْوِ تَخَلَّفُوا عَنْهُ وَفَرِحُوا بِمَقْعَدِهِمْ خِلاَفَ رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم فَإِذَا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم اعْتَذَرُوا إِلَيْهِ وَحَلَفُوا وَأَحَبُّوا
أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَنَزَلَتْ { لاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا
بِمَا لَمْ يَفْعَلُوا فَلاَ تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِنَ الْعَذَابِ}
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், நபி (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்படும்போது (அவருடன் செல்லாமல்) பின்தங்கி விடுவார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாற்றாக (போருக்குச் செல்லாமல்) தாங்கள் (வீட்டில்) அமர்ந்துகொண்டதைக் குறித்து மகிழ்ச்சியும் அடைவார்கள். நபி (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியதும், அவர்களிடம் வந்து (தங்கள் செயலுக்குப்) சாக்குப்போக்குகளைக் கூறிச் சத்தியம் செய்வார்கள். மேலும், தாங்கள் செய்யாத காரியங்களுக்காகத் தங்களைப் பிறர் புகழ வேண்டும் என்றும் விரும்புவார்கள். அப்போதுதான் (திருக்குர்ஆனின் பின்வரும் வசனம்) அருளப்பெற்றது:
"(நபியே!) தாங்கள் செய்தவற்றின் காரணமாக மகிழ்ச்சியடைகிறார்களே அத்தகையோரும், தாங்கள் செய்யாத செயல்களுக்காகப் புகழப்பட வேண்டும் என விரும்புகின்றார்களே அவர்களும், வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம்; (மாறாக) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு." (திருக்குர்ஆன் 3:188)