حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هَلَكَتْ قِلاَدَةٌ لأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَلَبِهَا رِجَالاً، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ. زَادَ ابْنُ نُمَيْرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மாலை ஒன்று (நான் இரவல் வாங்கியிருந்த நிலையில்) தொலைந்துவிட்டது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காக ஆட்களை அனுப்பினார்கள். (அவர்கள் தேடிக்கொண்டிருந்தபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்கள் உளூச் செய்திருக்கவில்லை; தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் உளூச் செய்யாமலேயே தொழுதார்கள். இது குறித்து அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, அல்லாஹ் 'தயம்மம்' பற்றிய வசனத்தை அருளினான்.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள், "ஆயிஷா (ரலி) அவர்கள் அஸ்மாவிடமிருந்து அதை இரவல் வாங்கியிருந்தார்கள்" என்று மேலதிகமாக அறிவித்தார்.