حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அல்லாஹ்வால்) வேதனை செய்யப்பட்ட இவர்களிடம் (அதாவது, ஸமூத் சமுதாயத்தினர் வாழ்ந்த இடங்களுக்கு) நீங்கள் அழுதவர்களாக அன்றி நுழையாதீர்கள். நீங்கள் அழவில்லையெனில், அவர்களிடம் நுழையாதீர்கள். அவர்களுக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேர்ந்துவிடக் கூடும்.”
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்டவர்களின் (அதாவது, ஸமூத் சமூகத்தாரின்) வசிப்பிடங்களுக்குள், நீங்கள் அழுதவர்களாகவேயன்றி நுழையாதீர்கள்; (ஏனெனில்,) அவர்களுக்கு ஏற்பட்டது போன்றது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடும்."
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِ الْحِجْرِ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அல்ஹிஜ்ர் (பகுதியின்) வாசிகள் குறித்துக் கூறினார்கள்: “வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களிடத்தில் (அதாவது, அவர்களின் வீடுகளில்) நீங்கள் அழுதவர்களாகவே தவிர நுழையாதீர்கள்; அவர்களுக்கு ஏற்பட்டது போன்றது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக.”
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (ஸமூத்)வாசிகளிடம் (அவர்களின் குடியிருப்புகளுக்குச் சென்ற தம் தோழர்களிடம்) கூறினார்கள்: (அல்லாஹ்வால்) தண்டிக்கப்பட்ட இந்த மக்களின் (குடியிருப்புகளுக்குள்) அழுதவர்களாகவேயன்றி நுழையாதீர்கள். நீங்கள் அழும் நிலையில் இல்லையென்றால், அவர்களுக்கு ஏற்பட்ட அதே (தண்டனை அல்லது) பேரழிவு உங்களையும் வந்தடையாதிருக்க (அக்குடியிருப்புகளுக்குள்) நுழையாதீர்கள்.