அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நிராகரிப்பவன் (மறுமையில்) எவ்வாறு தன் முகத்தால் ஒன்று திரட்டப்படுவான்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் அவனைத் தன் கால்களால் நடக்கச் செய்தவன், மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்யவும் ஆற்றலுள்ளவன் அல்லவா?" என்று பதிலளித்தார்கள். (கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆம்! நம்முடைய இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக!)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் இறைமறுப்பாளன் எவ்வாறு தன் முகத்தின் மீது (நடத்தப்பட்டு) ஒன்றுதிரட்டப்படுவான்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் அவனைக் கால்களால் நடக்கச் செய்தவன், மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்யவும் ஆற்றலுள்ளவன் அல்லவா?" என்று கூறினார்கள்.
கதாதா அவர்கள், "ஆம்! எங்கள் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக!" என்று கூறினார்.