அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்)) தம் இறைவனின் அத்தாட்சிகளில், மிகப்பெரியதைக் கண்டார்கள்!" (திருக்குர்ஆன் 53:18) எனும் வசனம் குறித்து (விளக்கமளித்து), (நபி (ஸல்) அவர்கள்) வானத்தின் அடிவானத்தை அடைத்துக்கொண்டிருந்த ஒரு பச்சை விரிப்பைக் கண்டார்கள் (என்று கூறினார்கள்).