இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3809ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏"‏‏.‏ قَالَ وَسَمَّانِي قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ فَبَكَى‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ், உனக்கு ‘லம் யகுனில் லதீன கஃபரூ’ (எனும் அத்தியாயத்தை) ஓதிக் காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை (ரழி) அவர்கள், "அவன் (அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். உடனே உபை (ரழி) (மகிழ்ச்சியால்) அழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4959ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ‏.‏ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏"‏‏.‏ قَالَ وَسَمَّانِي قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ فَبَكَى‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபையி (பின் கஅப்) (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ் எனக்கு, உமக்கு 'லம் யகுனில் லதீன கஃபரூ' (எனும் அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி கட்டளையிட்டான்." உபையி (ரழி) அவர்கள், "(அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். ஆகவே, உபையி (ரழி) அழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
799 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏"‏ ‏.‏ قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ‏"‏ اللَّهُ سَمَّاكَ لِي ‏"‏ ‏.‏ قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நான் உமக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள்.
அவர், "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு உபை (ரழி) அவர்கள் (மகிழ்ச்சியால்) அழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
799 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏"‏ ‏.‏ قَالَ
آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ‏"‏ اللَّهُ سَمَّاكَ لِي ‏"‏ ‏.‏ قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், நான் உமக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள். அதற்கு உபை (ரழி) அவர்கள், "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(ஆம்,) அல்லாஹ் உன் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று கூறினார்கள். ஆகவே உபை (ரழி) அழத் தொடங்கினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح