இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

484 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُنْذُ نَزَلَ عَلَيْهِ ‏{‏ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ‏}‏ يُصَلِّي صَلاَةً إِلاَّ دَعَا أَوْ قَالَ فِيهَا ‏ ‏ سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹ்" (எனும் அன்-நஸ்ர் அத்தியாயம்) நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து, அவர்கள் எந்தத் தொழுகையைத் தொழுதாலும், அதில் "சுப்ஹானக ரப்பீ வபிஹம்திக அல்லாஹும்மஃக்ஃபிர் லீ" (என் இரட்சகனே! நீ தூய்மையானவன்; உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன். அல்லாஹ்வே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திக்காமல் அல்லது கூறாமல் நான் கண்டதில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح