حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو لَهَبٍ ـ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ. فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அபூலஹப் —அவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்— நபி (ஸல்) அவர்களிடம், “நாள் முழுவதும் நீ நாசமாகப் போவாயாக! (இதற்காகவா எங்களை ஒன்று திரட்டினாய்?)” என்று கூறினான். அப்போது, “{தப்பத் யதா அபீ லஹபிவ் வதப்ப}” (அபூலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்!) (எனும் இறைவசனம்) அருளப்பட்டது.