இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1394ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو لَهَبٍ ـ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ‏.‏ فَنَزَلَتْ ‏{‏تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ‏}‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் அவனை சபிப்பானாக, அபூலஹப் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம், “நாள் முழுவதும் நீ நாசமாகப் போவாயாக” என்று கூறினான்.

பிறகு வஹீ (இறைச்செய்தி) வந்தது: “அபூலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்!” (111:1).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح