ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் தாபித் அல்-புனானி (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகு ஒருவர் பேசுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாக என்னிடம் கூறினார்கள்: (ஒருமுறை) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இகாமத் சொல்லப்பட்ட பிறகும் அவர்களை (ஏதோ ஒரு தேவைக்காக) தடுத்து நிறுத்திக் கொண்டார்.