இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

90ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، لاَ أَكَادُ أُدْرِكُ الصَّلاَةَ مِمَّا يُطَوِّلُ بِنَا فُلاَنٌ، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ يَوْمِئِذٍ فَقَالَ ‏ ‏ أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مُنَفِّرُونَ، فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الْمَرِيضَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ‏ ‏‏.‏
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு முறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இன்னார் (இமாம்) எங்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையை நீட்டுவதால் நான் (கடமையான ஜமாஅத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்துவிடக்கூடும்" என்று கூறினார். அறிவிப்பாளர் (அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள்) மேலும் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுவதில் அன்றைய தினத்தை விடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மக்களே! உங்களில் சிலர் (தொழுகைகள் போன்ற) நற்செயல்களை மற்றவர்கள் வெறுக்கும்படி செய்கிறீர்கள். ஆகவே, மக்களுக்குத் தொழுகை நடத்துபவர் அதனைச் சுருக்கிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவர்களில் நோயாளிகளும், பலவீனமானவர்களும், தேவையுடையோரும் (செய்ய வேண்டிய சில வேலைகள் உடையோரும்) இருக்கின்றனர்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
704ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ عَنِ الصَّلاَةِ فِي الْفَجْرِ مِمَّا يُطِيلُ بِنَا فُلاَنٌ فِيهَا‏.‏ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا رَأَيْتُهُ غَضِبَ فِي مَوْضِعٍ كَانَ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَمَنْ أَمَّ النَّاسَ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ خَلْفَهُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ ‏ ‏‏.‏
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இன்னார் (இமாம்) எங்களுக்குத் தொழுகையை நீண்ட நேரம் நடத்துவதால் நான் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து பின்தங்கி விடுகிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அந்நாளில் அவர்கள் கோபமடைந்ததை விடக் கடுமையாக வேறெந்த இடத்திலும் நான் அவர்களைப் பார்த்ததில்லை. பிறகு அவர்கள் கூறினார்கள்: "மக்களே! நிச்சயமாக உங்களில் (மக்களை) வெருண்டோடச் செய்பவர்கள் இருக்கின்றனர். எனவே, மக்களுக்கு யார் (இமாமாக நின்று) தொழுவிக்கிறாரோ அவர் (தொழுகையைச்) சுருக்கிக் கொள்ளட்டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் பலவீனமானவர்களும், முதியவர்களும், தேவையுடையவர்களும் இருக்கின்றனர்.''

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6110ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا قَالَ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ قَالَ فَقَالَ ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الْمَرِيضَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ ‏ ‏‏.‏
அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "இன்ன மனிதர் எங்களுக்கு (ஃபஜ்ர்) தொழுகை நடத்தும்போது அதை நீட்டுவதால் நான் அத்தொழுகையிலிருந்து பின்தங்கி விடுகிறேன்" என்று கூறினார். (அறிவிப்பாளர் கூறுகிறார்கள்:) அன்றைய தினம் அறிவுரை பகரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமுற்றிருந்ததை விடக் கடுமையாக வேறெந்த நாளிலும் கோபமுற்று நான் பார்த்ததில்லை. (அப்போது) அவர்கள் கூறினார்கள்: "மக்களே! நிச்சயமாக உங்களில் (மக்களை) வெருண்டோடச் செய்பவர்கள் இருக்கின்றார்கள். உங்களில் எவர் மக்களுக்குத் தொழுகை நடத்துகின்றாரோ அவர் அதைச் சுருக்கமாக நடத்தட்டும். ஏனெனில், அவர்களில் நோயாளிகளும், முதியவர்களும், தேவையுடையவர்களும் இருக்கிறார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7159ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَاللَّهِ لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ، مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا‏.‏ قَالَ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ، فَإِنَّ فِيهِمُ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ‏ ‏‏.‏
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, இன்னார் (அதாவது முஆத் பின் ஜபல்) எங்களுக்குத் தொழுகை நடத்தும் போது அதை நீண்ட நேரம் நடத்துவதால், நான் ஃபஜ்ருத் தொழுகையிலிருந்து பின்தங்கி விடுகிறேன்" என்று கூறினார்.

(அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:) அந்நாளில் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்கியபோது இருந்ததை விட அதிகக் கோபத்துடன் நான் அவர்களை ஒருபோதும் கண்டதில்லை.

பிறகு அவர்கள் கூறினார்கள்: "மக்களே! நிச்சயமாக உங்களில் (மக்களை) வெறுப்படையச் செய்பவர்கள் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் அதைச் சுருக்கமாக நடத்தட்டும்; ஏனெனில் அவர்களில் முதியவர்களும், பலவீனமானவர்களும், தேவையுடையோரும் இருக்கிறார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
466 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الصُّبْحِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا ‏.‏ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم غَضِبَ فِي مَوْعِظَةٍ قَطُّ أَشَدَّ مِمَّا غَضِبَ يَوْمَئِذٍ فَقَالَ ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ أَمَّ النَّاسَ فَلْيُوجِزْ فَإِنَّ مِنْ وَرَائِهِ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ ‏ ‏ ‏.‏
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அறிவித்தார்கள்:

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இன்னார் எங்களை (தொழுகையில்) வெகு நேரம் நிற்க வைப்பதன் காரணமாக, நான் காலைத் தொழுகையிலிருந்து பின்தங்கி விடுகிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஒரு உபதேசம் செய்யும்போது, அன்றைய தினத்தை விட மிகவும் கோபமாக நான் பார்த்ததே இல்லை. அவர்கள் கூறினார்கள்: "மக்களே! நிச்சயமாக உங்களில் (மக்களை) விரட்டக்கூடியவர்கள் இருக்கின்றார்கள். எனவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறாரோ அவர் சுருக்கமாக (தொழுகையை) நடத்தட்டும். ஏனெனில், அவருக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் அலுவல் உள்ளவர்கள் இருக்கிறார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
984சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ فِي صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ لِمَا يُطِيلُ بِنَا فِيهَا ‏.‏ قَالَ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَطُّ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ‏ ‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُجَوِّزْ فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ ‏ ‏ ‏.‏
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இன்னார் எங்களுக்கு தொழுகையை மிகவும் நீளமாக நடத்துவதால், நான் பஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) தொழுவதில்லை, பின்தங்கி விடுகிறேன்’ என்று கூறினார். அன்றைய தினத்தைப் போல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வளவு கோபத்துடன் உபதேசம் செய்து நான் பார்த்ததே இல்லை. அவர்கள் கூறினார்கள்; ‘மக்களே! உங்களில் மற்றவர்களை (தொழுகையை விட்டும்) வெறுத்து ஓடச் செய்பவர்கள் இருக்கிறார்கள். உங்களில் எவர் மற்றவர்களுக்கு தொழுகை நடத்தினாலும், அவர் அதைச் சுருக்கமாக நடத்தட்டும், ஏனெனில் அவர்களில் பலவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் அவசரத் தேவையுடையவர்கள் இருக்கிறார்கள்.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)