حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஏழு (எலும்புகள்) மீது ஸஜ்தா செய்யுமாறும், முடியையோ ஆடையையோ (தொழுகையின் போது) சுருக்கிக் கொள்ளாமலிருக்குமாறும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்."
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
நான் ஏழு எலும்புகள் மீது ஸஜ்தா செய்யுமாறும், ஆடையையோ முடியையோ மடக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிடப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் ஏழு உறுப்புகளின் மீது ஸஜ்தாச் செய்யுமாறும், எனது முடியையோ அல்லது ஆடையையோ சுருட்டாமல் இருக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன்."
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعٍ وَلاَ أَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا .
قَالَ ابْنُ طَاوُسٍ فَكَانَ أَبِي يَقُولُ الْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَكَانَ يَعُدُّ الْجَبْهَةَ وَالأَنْفَ وَاحِدًا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஏழு (உறுப்புகள்) மீது ஸஜ்தாச் செய்யுமாறும், எனது ஆடையையோ முடியையோ (ஸஜ்தாவின் போது) ஒதுக்கக் கூடாது என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”