حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ كَانَ أَنَسٌ يَنْعَتُ لَنَا صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ يُصَلِّي وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى نَقُولَ قَدْ نَسِيَ.
தாபித் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகையை செய்து காட்டுவார்கள். அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தி, ‘அவர்கள் (சஜ்தாவை) மறந்துவிட்டார்கள்’ என்று நாங்கள் சொல்லுமளவுக்கு நீண்ட நேரம் நிற்பார்கள்.
தாபித் அவர்கள் அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
நான் உங்களுக்குத் தொழுகை நடத்தும்போது, தொழுகையில் எதையும் நான் குறைப்பதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு எவ்வாறு தொழுகை நடத்தினார்களோ அவ்வாறே நான் தொழுகிறேன். அவர் (தாபித்) கூறினார்கள்: அனஸ் (ரழி) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்வார்கள், அதை நீங்கள் செய்வதை நான் (இப்போது) காண்பதில்லை; அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், 'அவர் (சஜ்தா செய்ய) மறந்துவிட்டார்' என்று ஒருவர் சொல்லும் அளவுக்கு (நீண்ட நேரம்) எழுந்து நிற்பார்கள். மேலும், அவர் (அனஸ் (ரழி)) அவர்கள் சஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், 'அவர் (இரண்டாவது சஜ்தா செய்ய) மறந்துவிட்டார்' என்று ஒருவர் சொல்லும் அளவுக்கு அந்த நிலையிலேயே இருப்பார்கள்.