இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2338 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ قُلْتُ لأَنَسِ
بْنِ مَالِكٍ كَيْفَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ شَعَرًا رَجِلاً لَيْسَ بِالْجَعْدِ
وَلاَ السَّبِطِ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ ‏.‏
கத்தாதா அறிவித்தார்கள்:
நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி எவ்வாறு இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது மிகவும் சுருட்டையாகவும் இல்லை; மிகவும் நேராகவும் இல்லை; (நடுத்தரமான) அலைகூந்தலாக இருந்தது. அது அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்கும் இடையில் இருந்தது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح