"நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், 'நீங்கள் ஸிப்திய்யா செருப்புகளை (மயிர் நீக்கப்பட்ட, பதனிடப்பட்ட தோலால் ஆன செருப்புகள்) அணிந்திருப்பதையும், அவற்றுடன் உளூ செய்வதையும் நான் பார்க்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றை அணிந்திருந்ததையும், அவற்றுடன் உளூ செய்ததையும் பார்த்தேன்' என்று கூறினார்கள்."